கியேவ் மீதான தாக்குதலும் நேட்டோவின் தீவிரப்பாடும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான ஒரு நேரடி போருக்கு அச்சுறுத்துகின்றன
போரின் தர்க்கம் நேரடியாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுக்கிறது. இது, மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கும் முழுக் கண்டத்தின் அழிவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய அச்சுறுத்தல்களை விடுக்கவும் போர் உந்துதலைத் துரிதப்படுத்துவதற்கும் இவற்றைப் பற்றிக் கொண்டுள்ளன.