காஸாவில் அதிகரித்து வரும் இனப்படுகொலையை நிறுத்து!
இனப்படுகொலையையும் அதனுடன் தொடர்புடைய பரவலான போர்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரே வழி, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்குவதுதான்.
இனப்படுகொலையையும் அதனுடன் தொடர்புடைய பரவலான போர்களையும் முடிவுக்கு கொண்டுவருவதற்குமான ஒரே வழி, ஒவ்வொரு நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்குவதுதான்.
ரஷ்யாவிற்கு எதிரான தொடர்ச்சியான இராணுவக் கட்டமைப்பு மற்றும் நேட்டோ போர் திட்டங்களுக்காக, பல பில்லியன் கணக்கான யூரோக்களை செலவழிக்க, சமூக நலத் திட்டங்களில் பெரும் வெட்டுக்களை வரவு-செலவு திட்டம் திணிக்கும்.
முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய நெருக்கடிக்கு ஏகாதிபத்திய நாடுகளின் பிரதிபலிப்பு, ஆக்கிரமிப்பு போரை போரை தீவிரப்படுத்துவது, வரி விதிப்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை பறிப்பதுமாகும். திசாநாயக்க அரசாங்கமும் இதே தாக்குதல்களையே செயல்படுத்துகிறது.
ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சியின் எதிர்ப்பு என்பது வெளியுறவு கொள்கை பிரச்சினைகளில், குறிப்பாக ரஷ்யாவுக்கு எதிரான போர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்ததே அன்றி, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்பின் தாக்குதல்கள் அல்ல என்பதை அதன் பதில் எடுத்துக்காட்டுகிறது.
அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்களால் பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான இனவாதப் போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு இந்தக் பயங்கரமான கண்டுபிடிப்பு மேலும் சான்றாகும்.
"சமாதானத்தின் கடைசி கோடை" குறித்து வலதுசாரி ஜேர்மன் வரலாற்றாசிரியர் சோன்கே நீட்ஸலின் அறிக்கை, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் இரத்தவெறி கொண்ட சதித்திட்டத்தையும் தெளிவாகக் காட்டுகிறது.
சர்வஜன வாக்கெடுப்பு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு இன்றியமையாத அனுபவமாக இருந்ததுடன், தற்போதைய அரசியல் நிலைமையில் மிகவும் பொருத்தமான பிரமாண்டமான அரசியல் படிப்பினைகளை கொண்டிருக்கிறது.
இலங்கையின் பொது சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, முதலாளித்துவ அமைப்பினுள் மிக அடிப்படையான பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு இல்லை என்ற உண்மையை உணர்த்தியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க்குற்றங்களுக்காக தேடப்படும் குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவை இன ரீதியாக சுத்திகரிக்கும் திட்டத்தின் சூத்திரதாரியான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து டாலரின் மதிப்பு 10 சதவீதம் சரிந்துள்ளது, இது வளர்ந்து வரும் நிதி கொந்தளிப்புக்கு மத்தியில் உலகளாவிய நாணயமாகவும் பாதுகாப்பான புகலிடமாகவும் இருக்கும் அதன் பங்கின் மீதான நம்பிக்கை இழப்பின் அறிகுறியாகும்.
மத்திய கிழக்கு முழுவதும் காஸா இனப்படுகொலை மற்றும் அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அடுத்த கட்டத்தை திட்டமிடுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
எதிர்வரும் கூட்டங்களுக்கான பிரச்சாரத்தின் போது, சோ.ச.க./IYSSE உறுப்பினர்கள் அதிகரித்து வரும் போர் குறித்து பரவலான பொது விழிப்புணர்வை கண்டனர். கலந்துரையாடலில் ஈடுபட்ட அனைவரும் மத்திய கிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை கண்டித்த ஒரு மாணவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் அறிவித்துள்ள போர் நிறுத்தம் ஒரு போலியானது என்றும் அது மீண்டும் ஒரு போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.
அமெரிக்கா அதன் 250வது ஆண்டு நிறைவைத் தொடங்குகையில், அது ஒரு அரசியல், சமூக, புத்திஜீவித மற்றும் கலாச்சார எதிர்ப்புரட்சியின் கோர விளிம்பில் உள்ளது.
உலகளாவிய மோதல் விரிவடைந்து வரும் நிலையில், இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள் ஈரான், காசா மற்றும் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும், சர்வதேச அளவில் உள்ள தங்கள் வர்க்க சகோதரர்களைப் போலவே ஒரே ஆபத்தை எதிர்கொள்கிறார்கள்.
சர்வாதிகாரம், போர், பெருந்திரளான நாடுகடத்தல்கள் மற்றும் சமூக வெட்டுக்கள் ஆகிய ட்ரம்பின் வேலைத்திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ உதவியை ஒழிப்பது, சமூக எதிர்ப்புரட்சியின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் தனது ஏகாதிபத்திய எதிர்ப்பு பாசாங்குகளைக் கைவிட்ட ஆளும் ஜே.வி.பி., தனது அமெரிக்க-சார்பு மற்றும் இஸ்ரேல்-சார்பு வெளியுறவுக் கொள்கையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
இந்தியாவின் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரை பல வழிகளில் ஆதரித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் போது காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குறைந்தது 66 குழந்தைகள் இறந்துள்ளனர் என்று காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம் இந்த வார இறுதியில் தெரிவித்துள்ளது. மேலும், காஸாவில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் பாரிய பட்டினி தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸ் ஒரு முழுமையான அறிக்கையை வெளியிட்டது. அதில் நிராயுதபாணியான உதவி கோரும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய படையினருக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதை ஹாரெட்ஸ் உறுதிப்படுத்துகிறது.
ஹேக்கில் இந்த வாரம் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாடு வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. ஏகாதிபத்திய கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் இராணுவ தயார்படுத்தலுக்கு உடன்பட்டுள்ளது.
தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறையுள்ள தனிநபர்கள் அனைவரையும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
12 நாள் அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சு தக்குதலுக்கு பிறகு, இஸ்ரேலிய அதிகாரிகள் "ஈரானுக்கு எதிரான தங்கள் தாக்குதலை" தொடர உறுதியளித்துள்ளனர்.
மெர்ஸ், மக்ரோன் மற்றும் ஸ்டார்மர், ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் குற்றகரத் தன்மை தெளிவாகவே தெரிந்திருந்தும், அதன் பேரழிவான விளைவுகளை உணர்ந்திருந்தும், அவர்கள் தாக்குதல் நடத்தியவர்களை நிபந்தனையின்றி ஆதரிக்கின்றனர்.
ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அமெரிக்கா அதன் மீது நடத்திய ஒரு பிரமாண்டமான குண்டுவீச்சில் அமெரிக்கா ஈரான் மீது ஒரு மறைவியக்க விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. போரில் இதுவரை பயன்படுத்தப்பட்டவற்றிலேயே மிக சக்திவாய்ந்த, பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளை வீசி ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் இஸ்ரேலியப் பினாமியும் ஈரானுக்கு எதிரான சட்டவிரோதமான, ஆத்திரமூட்டித் தூண்டப்படாத, ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன, அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதல் திறன் கொண்ட B-52 விமானங்கள் மற்றும் விமானம் தாங்கி போர்க் குழுக்கள் உடனடி தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருகின்றன.
நாட்டின் தண்டனைச் சட்டத்தின் கீழ் இருபத்தி ஆறு ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
"அதிகாரத்துக்கு வந்த முதல் நாளிலிருந்தே ஒரு சர்வாதிகாரியைப் போல" ஆட்சி செய்யப்போவதாக சூளுரைத்திருந்த ட்ரம்ப், சர்வதேச சட்டத்தையோ அல்லது அமெரிக்க அரசியலமைப்பையோ அங்கீகரிக்கவில்லை. மேலும் எவரையும், எங்கும், எந்த நேரத்திலும் கொல்லும் உரிமையை அவர் வலியுறுத்துகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடன் போருக்குள் உடனடியாக விரைந்து கொண்டிருக்கிறது, மத்திய கிழக்கில் அதன் பினாமியான இஸ்ரேலுடன் சேர்ந்து நீண்டகாலமாக அது சதித்திட்டம் தீட்டி வந்துள்ள ஒரு சூறையாடும் மோதலின் நேரடிக் கட்டுப்பாட்டை ஏற்றுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதுவாக இருந்தாலும், மோடி அரசாங்கமும் போயிங் நிறுவனமும் பயணிகளின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதை விட பெருநிறுவன நலன்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூகத் தளத்தில், “ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது... அனைவரும் உடனடியாக தெஹ்ரானைவிட்டு வெளியேற்ற வேண்டும்!" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் திமுக தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும். சாம்சங் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க உதாரணம் முதலீட்டாளர்களை பயமுறுத்தும் என பீதியடைந்த திமுக, தொழிலாளர்களின் வறிய ஊதியங்கள் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தை கசப்புடன் எதிர்த்தது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் மற்றும் சர்வாதிகார முறைகளுக்கு எதிராக மில்லியன் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தியபோது, அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு எதிரான பலத்தைக் காட்டுவதற்காக அமெரிக்க தலைநகருக்கு டாங்கிகளையும் ஆயிரக்கணக்கான துருப்புகளையும் கொண்டு வந்தார்.
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் சட்டவிரோதமான மற்றும் தூண்டுதலற்ற தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் சந்தேகத்திற்கு இடமின்றி ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் அப்பட்டமான செயல் என்று கண்டிக்கிறது.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு மட்டுமே ஒப்பிடக்கூடிய, வாழும் நினைவில் முன்னொருபோதும் கண்டிராத ஒரு நெருக்கடியை தொழிலாளர்களும் இளைஞர்களும் இன்று எதிர்கொள்கின்றனர். அப்போது, அடிமைத்தனத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக இருந்தது; இன்று, முதலாளித்துவத்திற்கு எதிரான வாழ்வா சாவா என்ற போராட்டமாக உள்ளது.
"3.5 சதவீத முக்கிய பாதுகாப்பு செலவினம் உட்பட 5 சதவீதமாக இராணுவச் செலவு அதிகரிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் தேசிய சுகாதார சேவையையோ (NHS) அல்லது ஏனைய நாடுகளில் அவர்களின் சுகாதார அமைப்புகள், ஓய்வூதிய முறையையோ வைத்திருக்கலாம், ஆனால் நீங்கள் ரஷ்ய மொழியைப் பேசக் கற்றுக்கொள்வது நல்லது" என்று நேட்டோவின் தலைவர் மார்க் ரூட் அறிவித்தார்.
ட்ரம்பின் வரிவிதிப்புப் போரால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையடுத்து, பைனான்சியல் டைம்ஸ் " சர்வவல்லமையுள்ள அமெரிக்க டாலர் மீதான நம்பிக்கையை உலகம் இழந்து வருகிறதா?" என்ற தலைப்பில் ஒரு பிரதான கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான பதிலும் அதிலே அடங்கியிருக்கிறது.
கடந்த செவ்வாய்கிழமை ஃபோர்ட் பிராக்கில் டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை, அவரது தனிப்பட்ட கட்டுப்பாட்டின் கீழ் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக கட்டவிழ்ந்துவரும் சதித்திட்டத்தின் ஒரு பெரிய விரிவாக்கத்தை குறிக்கிறது.
அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு நிறுவப்பட்டு வருகிறது. மத்தியிலுள்ள கூட்டாட்சி அரசாங்கம் எந்தவிதமான சட்டபூர்வ கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதுடன், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெட்கமின்றி சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீதிகளில் இராணுவம் குவிக்கப்படுவது, ட்ரம்ப் நிர்வாகத்தின் நன்கு தயாரிக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் பண்புரீதியிலான தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.
மே 20, செவ்வாயன்று, AFL-CIO இன் தேசிய தலைமையகத்தில் நான்சி வோல்ஃபோர்த்திற்கு ஒரு நினைவஞ்சலி நடைபெற்றது. குறிப்பிடத்தக்க வகையில், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கை அழிக்கும் முயற்சியில் அவர் வகித்த மத்திய பாத்திரம் குறித்து எந்தக் குறிப்பும் அந்த நிகழ்வில் குறிப்பிடப்படவில்லை.
கடந்த புதனன்று புரூசெல்ஸில் நடந்த நேட்டோவின் கூட்டத்தில், அதன் 32 உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், கூட்டணியின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இராணுவத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைத்தனர்.
நிதியியல் தன்னலக்குழுவிற்குள் இடம்பெற்றுவரும் மோதலின் சாராம்சமானது, பொருளாதாரக் கொள்கை, குறிப்பாக சுங்க வரிகள் தொடர்பான ஆழமான பிளவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
“நாங்கள் எங்கள் கோரிக்கைகளை அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்திடம் முன்வைத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை கடுமையாக நிராகரித்தனர், மேலும் எங்களை 200,000 ரூபாய்க்கு அற்ப விலைக்கு விற்கும் அவர்களின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க விரும்புகிறார்கள்.”
இந்த உரையை பென்சில்வேனியாவின் மெக்குங்கியில் உள்ள, மெக் றக்ஸ் நிறுவனத்தில் ஒரு வாகன தொழிலாளியும், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் உறுப்பினருமான வில் லெஹ்மன், மே 3 சனிக்கிழமை நடைபெற்ற 2025 சர்வதேச மேதின நிகழ்நிலை கூட்டத்தில் வழங்கினார்.
இந்தியாவிற்குச் சொந்தமான சியட் நிறுவனத்திற்கு தங்கள் தொழிற்சாலை விற்கப்படும் என்பதை அறிந்த பின்பு, மே 23 அன்று மிச்செலின் ஊழியர்கள் தங்கள் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) அனுசரணையில் இஸ்ரேல் உணவு விநியோகத்தை தொடங்கிய ஒரு வாரத்தில், இஸ்ரேலிய படைகள் உதவி விநியோகங்களை கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கொலைக் களங்களாக மாற்றி வருகின்றன.
இந்த உரையை ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் பிரதிநிதியான ஆண்ட்ரி ரிட்ஸ்கி, மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி கூட்டத்தில் வழங்கினார்
சிங்கப்பூரில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள தமது நட்பு நாடுகள் மற்றும் இராணுவ பங்காளிகள் தங்கள் இராணுவ செலவினங்களை அதிகரிக்கவும், சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் தங்களை போர்க்கால அடிப்படையில் நிலைநிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
தொழிற்சாலையின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், தொழில் பாதுகாப்பிற்கான அவர்களின் போராட்டத்தை நசுக்க, மிச்செலின் நிர்வாகம் மிதிகம தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக ஒரு பரந்த வேட்டையாடலைத் தயாரிக்கிறது.
உக்ரேனிய இரகசிய சேவையான SBU ரஷ்யாவிற்குள் ஆழமாகச் சென்று மூலோபாய குண்டுவீச்சு விமானங்களை அழித்தமை, ஒரு அணுஆயுத பேரழிவைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்த நேட்டோ எதையும் செய்யும் என்பதைக் காட்டுகிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தீர்க்கமான கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த புதனன்று, 1,200 இஸ்ரேலிய பல்கலைக்கழக கல்வியாளர்களும் நிர்வாகிகளும் காஸாவில் இஸ்ரேலிய இராணுவத்தால் இழைக்கப்பட்டுவரும் "போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை" எதிர்த்து ஒரு பகிரங்க கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
நிறுவனமும் தொழிற்சங்கமும் ஏற்படுத்திக்கொண்டுள்ள இரகசிய ஒப்பந்தத்தால் தங்கள் தொழில்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான சோ.ச.க.யின் அழைப்புக்கு 2,000 தொழிலாளர்கள் ஆர்வத்துடன் பிரதிபலித்தனர்.
வேலையை விட்டு நிற்பதற்கு மிகக் குறைந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கும் பன்னாட்டு நிறுவனத்துடனான தொழிற்சங்கத்தின் ரகசிய ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
எண்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், 1940 மே 24 அதிகாலையில், மாபெரும் மார்க்சிச புரட்சியாளரும் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியில் விளாடிமிர் லெனினுடன் இணைந்து செயல்பட்ட தலைவருமான லியோன் ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ அடித்தளங்களிலும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று அனுபவங்களை உட்கிரகித்துக் கொள்வதிலும் வேரூன்றிய ஒரு சோசலிச அரசியல் முன்னோக்குடன் ஆயுதபாணியாக்கப்பட்ட உலக சோசலிச வலைத் தளம், பெரிய பொய்களை அம்பலப்படுத்துவதிலும், உண்மையைப் பாதுகாப்பதிலும் சளைக்காமல் ஈடுபட்டுள்ளது.
சமூக நலத்திட்டங்கள் மற்றும் பணிகளில் இருந்து பாரிய ஆதார வளங்களை போர் எந்திரத்திற்குள் திருப்பிவிடுவதானது, ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் பாதையில் கொண்டு செல்கிறது என்பதைக் காட்டுகிறது.
வாஷிங்டனின் புதிய வரிவிதிப்புகளுக்கு பதிலளிப்பதற்காக திசாநாயக்க தேசிய ஐக்கியத்துக்கு அழைப்பு விடுப்பதானது, இலங்கை தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்கள் மீது மேற்கொள்ளப்படவுள்ள கொடூரமான தாக்குதல்களைக் குறிக்கிறது.
தொழிற்சாலை மூடலுக்கு "இயக்குவதற்காக ஏற்படும் அதிக செலவுகளே" காரணம் என்று நெக்ஸ்ட் மெனுஃபக்சரிங் கூறுகிறது. இது நிறுவனத்தின் மற்ற இரண்டு தொழிற்சாலைகளிலும் தொழில்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதற்கான எச்சரிக்கை ஆகும்.
மினியாபோலிஸ் போலிசின் கைகளாலும் முழங்கால்களாலும் நசுக்கி படுகொலை செய்யப்பட்ட ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் படுகொலை, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொடர்ச்சியான பாரிய போராட்டங்களைத் தூண்டியது. ஆனால், இந்த சம்பவம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் ஆதரவுடன், போலீசார் சாதனை எண்ணிக்கையிலான மக்களை தொடர்ந்தும் கொன்று வருகின்றனர்.
ஆளும் வர்க்கம் போர் வெறியைத் தூண்டிவிட்டு, அனைத்து எதிர்ப்புக் குரல்களையும் அடக்கி முன்னெடுக்கும் ஒரு வெறித்தனமான பிரச்சாரத்தை எதிர்கொண்டுள்ள இந்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான பிற்போக்கு மோதலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது.
இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) முக்கிய பங்குவகித்த நெல்லி படுகொலை, மிகவும் வறிய அகதிகள் மற்றும் வங்கதேசத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உட்பட "சட்டவிரோத வெளிநாட்டவர்களை", இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட வகுப்புவாத தூண்டுதலின் விளைவாக ஏற்பட்டதாகும்.
சீற்றமான போராட்டங்களை எதிர்பார்த்து, நெக்ஸ்ட் நிர்வாகம் திங்கள்கிழமை இரவு ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிய பிறகு, வாட்ஸ்அப் செய்திகள் மூலம் தொழிற்சாலை மூடல் குறித்து ஊழியர்களுக்குத் தெரிவித்தது.
மொரேனோவாத நிரந்தரப் புரட்சி குழு (Révolution permanente - RP), புரட்சி, சர்வதேசியவாதம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் பற்றி வாயளவில் உச்சரித்து வருகிறது. ட்ரொட்ஸ்கிசத்திற்கு வன்முறையில் விரோதமாக இருந்து வரும் இந்தக் குழு, போரை ஆதரிக்கும் ஸ்ராலினிச, சமூக-ஜனநாயக அல்லது முதலாளித்துவ தாராளவாத கட்சிகள் மற்றும் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனான அதன் சொந்த உறவுகளுடன் சமரசம் செய்ய முயற்சிக்கிறது
ஆணையிறவில் உள்ள தேசிய உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் நிர்வாகத்தின் தாக்குதலை மட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதன் வாடிக்கையாளரான ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர்.
ஒரு பேரழிவு தரும் அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய, ஒரு முழுமையான போர் வெடிக்கும் அச்சுறுத்தல் நிலைமையிலும், ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகள் உட்பட இந்தியாவின் எதிர்க்கட்சிகள், "தேசத்தைப் பாதுகாக்கும்" பெயரில் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன.
ஐரோப்பா முழுவதும் சமீபத்தில் நடந்த தேர்தல்களின் முடிவுகள், ஆபத்தான மற்றும் தீவிரமடைந்து வரும் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன : அவை, அதிதீவிர வலதுசாரிகள் மற்றும் பாசிச சக்திகளின் எழுச்சி, மற்றும் அதிகாரப்பூர்வ அரசியலின் மையத்தில் அவற்றின் ஒருங்கிணைப்பு என்பனவாகும்.
கூட்டத்தில் எமது பேச்சாளர்கள், அமெரிக்கா பாசிசமாக மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி பதிலளிப்பார்கள். மேலும், ட்ரம்பின் ஆட்சி உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்பதை அவர்கள் விளக்கி, அதை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தை முன்வைப்பார்கள்.
காஸா அழிக்கப்பட்டு, பல பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்துடன் பத்தொன்பது மாதங்கள் கூட்டுச் சேர்ந்து செயல்பட்ட பிறகு, மக்ரோன், ஸ்டார்மர், மற்றும் கார்னே ஆகிய மூன்று தலைவர்களும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை கடுமையாக எதிர்க்கும், சிடுமூஞ்சித்தனமான மற்றும் பயனற்ற பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இனப்படுகொலை "இறுதி தீர்வின்" இறுதிக் கட்டங்கள் — பாரிய படுகொலைகள் மற்றும் காஸா மக்களை நாடு கடத்தல்— அனைத்து ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவற்றின் அரபு முதலாளித்துவ எடுபிடிகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு, பாலஸ்தீன மக்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்திற்கு வெளியே வலுக்கட்டாயமாக இடம்பெயர வைக்கும் அமெரிக்காவின் மிக முன்னேறிய திட்டத்திற்கு மத்தியில், இஸ்ரேல் காஸா மீதான "இறுதி" வெற்றியை அறிவித்துள்ளது.
அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணியின் முன்னாள் தலைவரான அல்-ஷாராவை ட்ரம்ப் பாராட்டிப் புகழ்வது, ஏகாதிபத்திய-சார்பு, போலி-இடது அரசியல் கட்சிகளால் அண்மித்து 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஊக்குவிக்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட "சிரிய புரட்சிக்கு" கிடைத்த பொருத்தமான மகுடமாகும்.
ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் முற்றிலும் தடுக்கக்கூடிய மரணம் குறித்து சாமானிய தொழிலாளர்களின் தலைமையில் ஒரு சுயாதீனமான விசாரணைக்கு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சியும் (அமெரிக்கா) உலக சோசலிச வலைத் தளமும் ஆதரிக்கின்றன.
ட்ரம்ப் குடும்பத்தின் ஊழலானது இந்தப் பாசிச அரசாங்கத்தின் இன்றியமையாத அம்சமாகும்.
மே 3 அன்று, பாலஸ்தீனிய பிராந்தியங்களில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பனீஸ், இஸ்ரேலால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக, முன்னணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (ஜேர்மன்) தேசியக் குழு உறுப்பினர் கட்ஜா ரிப்பர்ட் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் நிலையில், இஸ்ரேல் காஸாவில் அதன் பாரிய படுகொலைகளைத் தீவிரப்படுத்தி, இரண்டு மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதுடன், ஒரே நாளில் குறைந்தபட்சம் 80 பேரைக் கொன்றுள்ளது.
வணிக பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ட்ரம்பும் ஏனைய அமெரிக்க தன்னலக்குழுக்களும், சவூதி விருந்தோம்பல்களில் அன்பான உற்சாகத்தைக் கண்டனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்க முடியாது. அராஜகம் மற்றும் மிருகத்தனத்தில் சல்மானுக்கு போட்டியாக அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை, வெள்ளை மாளிகைக்கு திரும்பியதிலிருந்து ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஒரு சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்டாலும், மூலதனத்துடன் திருச்சபையின் கூட்டை மேலும் வளர்ப்பதற்கும் அதன் சொந்த பரந்த நிதி நலன்களை பாதுகாப்பதற்கும் பிரீவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பின்னடைவு இருந்தபோதிலும், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. தேர்தல் முடிவுகளைப் பயன்படுத்தி சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை இரக்கமின்றி செயல்படுத்தவும், உழைக்கும் மக்களின் வளர்ந்து வரும் வெகுஜன எதிர்ப்பை அடக்கவும் முயற்சிக்கும்.
“விக்ஸ் உட்பட தோழர்கள், அந்த ஜனரஞ்சக குட்டி முதலாளித்துவ மாற்றீட்டை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காக அனைத்துலகக் குழுவின் பக்கமும் இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பக்கமும் திரும்பினர்.”
கடந்த திங்களன்று, காஸா பகுதியை முழுவதுமாக இராணுவ ரீதியாக ஆக்கிரமித்து, மக்களை ஆயுதமேந்தியவர்களின் காவலின் கீழ் சித்திரவதை முகாம்களுக்கு மாற்றும் திட்டத்துடன், காஸாவின் இனச்சுத்திகரிப்புக்கான இறுதி கட்டத்தின் தொடக்கத்தை நெதன்யாகு அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மக்களை கட்டாயப்படுத்தி பாலைவனத்தின் ஊடாக கொண்டுசென்று அனுப்புவதற்கு அல்லது கப்பல்களில் ஏற்றுவதற்கான தயாரிப்பு ஆகும்.
இந்த உரையை மே 3 சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மே தினம் 2025 இணையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா ஆகியோர் வழங்கினர்.
தெற்காசியாவின் பகைமை அணு ஆயுத சக்திகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போரின் விளிம்பில் உள்ளன. அத்தகைய மோதல், பிராந்தியத்தின் 2 பில்லியன் மக்களுக்கு மட்டுமன்றி முழு உலகிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.
இரு தரப்பிலும் உள்ள அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர் அச்சுறுத்தல்களின் அதிகரித்து வரும் கூச்சல்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அணு ஆயுத மோதலின் அச்சுறுத்தலை பற்றி குறிப்பிட்டார்.
2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் உரையை WSWS இங்கே பதிவேற்றுகிறது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80 ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவுகூரல்கள், உலகப் போர் மற்றும் பாசிசத்தின் மீள்வருகையின் மத்தியில் நடைபெற்று வருகின்றன.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு கடந்த திங்களன்று அறிவிக்கையில், காஸா பகுதியை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், அதன் மக்களை உள்நாட்டில் சித்திரவதை முகாம்களுக்கு இடம்பெயர்க்கவும் மற்றும் உணவு விநியோகத்தில் ஒரு இராணுவ ஏகபோகத்தை திணிக்கவும் இஸ்ரேலிய அமைச்சரவை ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை NBC தொலைக்காட்சியில் இடம்பெற்ற Meet the Press நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு அசாதாரண நேர்காணலில், அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அரசியலமைப்பை தாங்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் பலமுறை பிரகடனம் செய்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தைப் போலவே, வரிப் போரின் பேரழிவு விளைவுகளுக்கு எதிரான போராட்டமும் சர்வதேசமயமானது.
இந்தத் தாக்குதல்கள் உலகின் மிகவும் ஆபத்தான போருக்கு வழிவகுக்கும் ஒரு பிரதான இடத்தில் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டுள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே மூன்று போர்களை நடத்திய இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான பகைமை, இப்போது சீனாவுக்க எதிரான அமெரிக்கத் தலைமையிலான போர் தயாரிப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், 2025 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையின் காணொளியையும் உரையையும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இங்கே வெளியிடுகிறது.
ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள், ட்ரம்பின் வர்த்தகப் போர், இராணுவவாதம் மற்றும் சமூகச் செலவினங்கள் மீதான தாக்குதல் வேலைத்திட்டத்துடன் தாராளவாதிகளுடன் தொழிற் கட்சி கொண்டுள்ள தொடர்பை மறுதலிப்பதாக இருந்ததே அன்றி, அதற்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.
அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் தங்கள் இராணுவச் செலவுகள் முற்றிலும் தற்காப்பு நோக்கங்களுக்கானவை என்றும், வரவு செலவுத் திட்டங்கள் "பாதுகாப்பு செலவுகளுக்காக" அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றன. இது ஒரு கோரமான பொய்யாகும்.
உலகெங்கிலும் இராணுவச் செலவினங்கள் 9.4 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் இப்போது பனிப்போருக்குப் பிறகு மிக வேகமாக மீண்டும் ஆயுதபாணியாகி வருகிறது. இது, 1988 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்களில் மிக உயர்ந்த விகிதமாகும்.
இந்தியாவின் தீவிர வலதுசாரி, அமெரிக்க ஆதரவு அரசாங்கம் ஏப்ரல் 23 அன்று இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியதிலிருந்து தெற்காசியாவின் போட்டி அணுவாயுத சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள் கொதித்தெழுந்துள்ளன.
கொலன்னாவை மற்றும் காரைநகரில் உள்ள உழைக்கும் மக்களை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மற்ற பகுதிகளில், எந்தவொரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கல்லை.
கொலன்னாவை மற்றும் காரைநகரில் உள்ள உழைக்கும் மக்களை உள்ளூராட்சித் தேர்தல்களில் அதன் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது. மற்ற பகுதிகளில், எந்தவொரு கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை.
டொனால்ட் ட்ரம்ப்பும், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்திற்கும் — தன்னலக்குழு, சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் போர் — எதிரான முற்போக்கான பதிலை மார்க் கார்னியும் அவரது தாராளவாதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற நம்பிக்கையில், அவர்களுக்கு வாக்களித்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் குரூரமாக வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முதன்மையாக தொழிற்சங்கங்களும் சமூக ஜனநாயக NDP கட்சியும் பொறுப்பாகும்.