ஒக்ஸ்பாம்: 10 அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2020 முதல் 6 மடங்கு அதிகரித்துள்ளது
வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு ஒட்டுண்ணி தன்னலக்குழுவின் அமெரிக்காவின் மேலாதிக்கம், அனைவரும் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு ஒட்டுண்ணி தன்னலக்குழுவின் அமெரிக்காவின் மேலாதிக்கம், அனைவரும் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிய நாடோடி என்ற கதாபாத்திரத்தை உருவாக்குவதன் மூலம், சாப்ளின் உத்தியோகபூர்வ முதலாளித்துவ சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூக வகையை — ஒரு நாடோடி, வேலையில்லாத மனிதன், சொத்து இல்லாத மனிதன் — எடுத்துக்கொண்டு, அவரை உலகின் மிகவும் பிரியமான கதாபாத்திரமாக மாற்றினார்.
ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, ட்ரம்ப் அணு ஆயுத அச்சுறுத்தலை முன்வைத்திருப்பது, சீனாவுக்கு எதிரான ஒட்டுமொத்த போருக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான கூர்மையான எச்சரிக்கையாகும்.
வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்புவதற்கும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதற்கும் அப்பால், அணு ஆயுத சோதனை என்பது, தவறான கணக்கீடுகள் மூலமாகவோ அல்லது வேண்டுமென்றே தூண்டுதல் மூலமாகவோ, அணு ஆயுதப் போரின் சாத்தியத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் அதிகரிக்கும் ஒரு செயலாக உலகளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.
நெருங்கி வந்த தனது மரணத்தை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்ட ஆலன், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு 50 ஆண்டுகளை அர்ப்பணித்த, தனது வாழ்க்கைப் பாதையில் திருப்தியை வெளிப்படுத்தினார்.
மம்தானியின் பிரச்சாரத்திற்கான ஆதரவு என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடது நோக்கிய நகர்வைப் பிரதிபலிக்கிறது. ஆனால், மம்தானியின் வேலைத்திட்டமானது, தன்னலக்குழு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
தமிழ்-பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திசாநாயக அரசாங்கம் அமுல்படுத்தும் ஐ.எம்.எப் ஆல் கட்டளையிடப்பட்ட சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலமே போதுமான சம்பளம் வாழத்தகுந்த வீடு, முறையான கல்வி, சுகாதாரம் மற்று ஏனைய சமூக உரிமைகளை வென்றெடுக்க முடியும்
இலத்தீன் அமெரிக்க கடற்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக, அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைத் தாக்குதலாக, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொடிய தாக்குதல் இருக்கிறது.
1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் கரீபியன் கடலில் பிரமாண்டமான கடற்படையை அணிதிரட்டி வரும் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மற்றும் சட்டவிரோத போரை வெளிப்படையாக தயாரித்து வருகிறது.
ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனத்தாலும் உடந்தையாலும் சாத்தியமாக்கப்பட்ட, ஜனவரி 6, 2021 அன்று தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பின் இலக்குகளை ட்ரம்ப் செயல்படுத்தி வருகிறார்.
ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு மத்தியில், ஐரோப்பிய கவுன்சில் பாதுகாப்பு தயார்நிலை திட்ட வரைபடம் 2030 ஐ ஏற்றுக்கொண்டதானது, சர்வாதிகாரம் மற்றும் உலகளாவிய போருக்கான அடித்தளத்தை அமைத்து, முழுமையாக இராணுவமயமாக்கப்பட்ட ஐரோப்பாவை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தைக் குறிக்கிறது.
அக்டோபர் 18 அன்று, 7 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இணைந்து, நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தை ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்தனர்.
இந்த "சமாதான" உடன்படிக்கை, காஸாவின் பெரும் பகுதியை நிரந்தரமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும், தினசரி படுகொலைகள் மற்றும் மக்களை வேண்டுமென்றே பஞ்சத்துக்குள் தள்ளுவதையும் புனிதப்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்களை பாதுகாக்க தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.
பொலிஸ் முக்கிய சாட்சிகளை முன்வைக்கத் தவறியதால், 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கின், செப்டம்பர் 10 அன்று நடக்கவிருந்த விசாரணை டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாரிய போராட்டங்கள் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. ஆனால், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு மற்றும் பரந்த சூழ்நிலைமை குறித்த புரிதல் இல்லாமல், இந்த மகத்தான மக்கள் எதிர்ப்பு சிதறடிக்கப்படும் அபாயம் உள்ளது.
டேவிட் நோர்த் தலைமையிலான இந்த இணையவழிக் கருத்தரங்கு, வரலாற்று ஆசிரியர்களான டேவிட் ஆபிரகாம், ஜாக் பவுவெல்ஸ் மற்றும் மரியோ கீலர் ஆகியோரை ஒன்றிணைத்து, ஜேர்மன் பெருவணிக மற்றும் அரசு நிறுவனங்கள் ஹிட்லரின் எழுச்சியை எவ்வாறு சாத்தியமாக்கின என்பதை ஆராய்கிறது. அதே நேரத்தில், இந்தக் கருத்தரங்கு பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதற்கான அவசர சமகாலப் படிப்பினைகளையும் வழங்குகிறது.
ஸ்ராலினிச CITU கூட்டமைப்புடன் இணைந்து செயல்படும் மெட்ராஸ் இரப்பர் தொழிற்சாலை (MRF) ஊழியர் சங்கம் (MEU), ஒரு MRF ஆலையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது.
ஏழு மில்லியன் மக்கள் பங்கேற்ற 2,700 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆர்ப்பாட்டங்கள், ஒட்டுமொத்தமாக நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.
வெனிசுவேலாவிலும் அதற்கு அப்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளது. இதனை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் தயங்கவில்லை.
சமூகக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய அணிதிரட்டல்கள் பூர்த்தி செய்யப்படுவதற்கு தொழிலாளர் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டம் அவசியமானது. அதே வேளையில், முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாப்பதும், ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், இராணுவ தலையீட்டின் நோக்கமாக இருக்கிறது.
இந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற "கடன் மற்றும் நிர்வாகம்" மாநாட்டில் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார மீட்சி என்று அழைக்கப்படுவதற்கு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பணம் செலுத்துகிறார்கள்.
ஜனாதிபதி திசாநாயக நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ள பாதீட்டு உரையில் புதிய சர்வதேச நாணய நிதிய உத்தரவுகளும் அடங்கும்.
இலங்கை மீதான அமெரிக்க வரி நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்குவதோடு ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள மிகப்பெரிய சுமைகளையும் அதிகரிக்கும்.
அக்டோபர் 18 அன்று, மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய மக்களும் "மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்தின் கீழ் ட்ரம்பின் தாக்குதல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட உள்ளனர்.
அக்டோபர் 18ம் திகதி சனிக்கிழமை, அமெரிக்காவில் இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டங்கள், ஒரு பாசிச சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால், இதில் இல்லாத மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு தெளிவான வேலைத்திட்டமும் நனவான மூலோபாயமும் ஆகும்.
1960களில், சாதாரண தாராளவாதிகள் வழங்கிய சீர்திருத்தத் வேலைத் திட்டத்தை விட மிகவும் அடக்கமான சீர்திருத்த வேலைத் திட்டத்தை வழங்கும் மம்தானியின் பிரச்சாரம், நியூ யோர்க்கிலும், நாடு முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார உந்துதலை எதிர்கொண்டுவரும் உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக்க சேவையாற்றுகிறது.
இ.மி.ச. தொழிலாளர்கள், இரண்டாவது மாதமாக தொடரும் தங்கள் போராட்டத்தை பற்றியும், அதேபோல் மறுசீரமைப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் மதிப்பாய்வு செய்து, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதை இனியும் தாமதிக்க முடியாது.
அரசாங்க அடக்குமுறைக்கு அடிபணிந்த தொழிற்சங்கத் தலைவர்கள், மறுசீரமைப்புக்கு எதிரான இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தி கலைக்க முயற்சிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். ஜனநாயகம் மற்றும் சமூக உரிமைகளை இவர்கள் அடைவதற்கும், அமைதியான சகவாழ்வுக்கான உண்மையான அடித்தளத்தை நிறுவுவதற்குமான ஒரே வழி, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நெருக்கமான கூட்டணியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கிற்கான போராட்டம் ஆகும்.
ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க, அமெரிக்காவில் ட்ரம்ப் செய்ததைப் போலவே, பிரான்சிலும் ஒரு அதிதீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்புவதை மக்ரோனும், முதலாளித்துவ தன்னலக்குழுவும் நோக்கமாக கொண்டுள்ளனர்.
அரசாங்க முன்னேற்றம் குறித்த ஹேரத்தின் கூற்றுகளுக்கு மாறாக, சமீபத்திய UNHRC அறிக்கை திசாநாயக்க நிர்வாகத்தின் கீழ் பரவலான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துகிறது.
பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாசிச எதிர்ப்பை "பயங்கரவாதமாக" முத்திரை குத்தவும், மக்களுக்கு எதிராக அரசின் அடக்குமுறை எந்திரத்தை அணிதிரட்டவும், வெள்ளை மாளிகை ஒரு சதித்திட்டத்தின் தலைமையகமாக மாறியுள்ளது.
கடந்த புதன்கிழமை, ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த தயாராகி வருவதாக NBC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தலைமைத் தளபதியான ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்காவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.
காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடங்கியதன் இரண்டாம் ஆண்டு நிறைவில், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் 21 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்றுவரும் மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றத்தால் சீற்றமடைந்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகள் உத்தரவானது மின்சாரத் தொழிலாளர்களின் தொழில்துறை போராட்ட நடவடிக்கையைத் தடை செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கிறது. தடையை மீறும் குற்றவாளிகள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை ஒத்திவைப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுள்ள திசாநாயக அரசாங்கம். இப்போது மன்னார் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
கடந்த வாரயிறுதியில், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி, போர்ட்லாந்து மற்றும் சிக்காகோவில் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இந்த சமீபத்திய போர்க் குற்றத்திற்கான எதிர்வினை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களின் ஆட்சியாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளியை வெளிப்படுத்துகிறது.
ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசாங்க பணி முடக்கத்தின் பின்னணியில் உள்ள மையப் பிரச்சினை, ட்ரம்ப் நிர்வாகத்தை பதவியில் இருந்து வெளியேற்றவும், இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்திற்கான அதன் குற்றவியல் சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டிய அவசியத்தை குறிக்கிறது.
இ.மி.ச. மீதான அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடிப்பதானது மற்ற இடங்களில் மறுசீரமைப்பு திட்டத்தையும் வாழ்வாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலையும் தோற்கடிப்பதற்கு மிக முக்கியமானதாகும். இதனாலேயே ஐ.எம்.எஃப்./அரசாங்கத் திட்டத்தைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒன்றுபட்ட தாக்குதலை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே ஒரு கடற்படை தளத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத் தளபதிகள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் முன்னிலையில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது திட்டத்தை முன்வைத்தார்.
திசநாயக்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தில் இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கும் போராட்டம் ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது.
ஸ்டாலினிச சிபிஎம் கட்சியால் நீண்ட காலமாக "முற்போக்கானது" என்று விளம்பரப்படுத்தப்படும் பெருவணிக ஆதரவு திமுக தமிழ்நாடு அரசு, தனியார்மயமாக்கலை எதிர்த்து போராடிய சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மீது மீண்டும் மீண்டும் காவல்துறை வன்முறையைப் பயன்படுத்துகிறது.
கொடிய வன்முறையைப் பயன்படுத்தும் அதிகாரத்துடன், ஓரிகான் மாநிலத்திலுள்ள போர்ட்லேண்டிற்கு ட்ரம்ப் படைகளை அனுப்பியிருப்பது, அமெரிக்க மக்கள் மீதான ஒரு குற்றவியல் தாக்குதலாகவும், ஜனநாயக உரிமைகளை அழித்து, ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரையில், சர்வதேச சட்டத்தையும் மீறி, பாரிய படுகொலை மற்றும் பயங்கரவாதம் பற்றி பெருமிதத்துடன் பீற்றிக் கொண்டதோடு, உலக மக்களின் பொதுக் கருத்தையும் மீறி காஸா இனப்படுகொலையை தொடரப் போவதாக சூளுரைத்தார்.
அடுத்த வாரம் இடம்பெற உள்ள ஒரு மாநாட்டிற்கு, நூற்றுக்கணக்கான இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுவது, உள்நாட்டில் சர்வாதிகாரத்தையும், வெளிநாடுகளில் போர்களை மேற்கொள்வதற்கான ட்ரம்பின் திட்டங்களுடன் தொடர்புடையதாகும்.
மத்தியதரைக் கடலிலும், ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மை நீர்நிலைகளிலும், ஐரோப்பிய குடிமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தண்டனையின்றி தொடர்ந்து துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு வருகிறது.
கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் ஒரு பாசிச உரையை நிகழ்த்தினார். இந்த உரையில் "அமெரிக்கா முதலில்" என்பது உலகத்தை ஒழுங்கமைக்கும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் உலகெங்கிலும் போரையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதிற்கு அச்சுறுத்தியதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளையிட்டு பெருமை பீற்றிக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தொடக்கி வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்தை திசாநாயக அரசாங்கம் துரிதப்படுத்தி செயல்படுத்தி வருவதால், அவர் பொருளாதாரத்தின் "முற்போக்கான மாற்றத்தில்" ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்.
தொழிற்சங்கத் தலைமை அதை முழுமையாக ஆதரிப்பதால் மட்டுமே திசாநாயக்க அரசாங்கத்தால் 22,000 பேர் கொண்ட இ.மி.ச. ஊழியர்கள் மீதான செலவுக் குறைப்புத் தாக்குதலைத் தொடர முடிந்தது.
கடந்த சில நாட்களாக வெளிவந்த அறிக்கைகளும், இந்த வாரம் வெளிவரவிருக்கும் அறிக்கைகளும், சில ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை காஸா இனப்படுகொலையில் தங்கள் உடந்தையை மூடிமறைப்பதிற்காக சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏனைய தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளைப் போலவே, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை உடனடியாக 2,000 ரூபாவாக உயர்த்துவதாக அளித்திருந்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்த பின்னர் குப்பையில் போட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் சுங்கவரி விதிப்பினால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, பொருளாதாரப் பேரழிவு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் போர் அபாயம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த நான்கு மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிலிப்பைன்ஸில் எழுந்திருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அரசியல் கொந்தளிப்புடன் பிணைந்துள்ளது.
இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
உலகின் மேலாதிக்க சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பொறாமையுடன் பார்க்கும் அதே வேளையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பிரபுத்துவ ஆணவம் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் மரபுகளையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேராசை கொண்ட, இரத்தத்தில் நனைந்த உதாரணத்தையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்கிறது.
இ.மி.ச. மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் முழு தொழிலாள வர்க்கத்தின் பொது போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.
கடந்த புதன்கிழமையன்று, பாலஸ்தீனத்தின் மீது "முழுமையான வெற்றிக்கான" தனது திட்டத்தை நிறைவேற்ற நகர்ந்துள்ள இஸ்ரேலிய இராணுவம், காஸா நகரத்தின் மையப்பகுதியில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.
இந்த நேர்காணல் ஆகஸ்ட் 16 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்துடன், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 85 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வின் பாகமாக, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் நடத்தப்பட்டது.
ஆளுமை மற்றும் அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில், சார்லி கிர்க்குடன் மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் நபர் யாராவது இருந்தால், அது 1960 களில் அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவராக இருந்த ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல் தான் இருப்பார்.
தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளின் காரணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கத்தால், இந்தப் பிரதான தொழிலாள வர்க்கப் பிரிவின் மீதான அதன் தாக்குதலைத் தயாரிக்க முடிந்துள்ளது.
உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் துருக்கியப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருமையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒற்றுமையுடன் துருக்கியில் புதிதாக நிறுவப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை இந்தக் காணொளி விரிவாக விளக்குகிறது.
ஜனாதிபதி பிரபோவோவும் அவரது அரசாங்கமும் பரவலான மக்கள் கோபத்தையும் வெறுப்பையும் தணிக்க மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த போதிலும், போராட்டங்களைத் தூண்டிய அடிப்படைப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.
கடந்த புதன்கிழமை தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய ட்ரம்ப், இந்த துப்பாக்கி பிரயோகத்தை பயன்படுத்திக் கொண்டு, சார்லி கிர்க்கை ஒரு தியாகியாக மாற்றி, அதி தீவிர வலதுசாரிகளிடமிருந்து அதிகரித்து வரும் வன்முறையை நியாயப்படுத்தவும், தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும் முயன்றுள்ளார்.
கடந்த வாரம் 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததே உடனடி தூண்டுதலாக இருந்தாலும், இந்தப் போராட்டங்களானவே வேலை வாய்ப்புகள் இல்லாமை, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக இடைவெளி குறித்த பரவலான விரக்தியை பிரதிபலிக்கின்றன.
போலந்து வான்வெளியில் ரஷ்ய ஆளில்லா விமானங்களை நேட்டோ சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, ஐரோப்பிய வல்லரசுகள் போரை தீவிரப்படுத்துவதற்கு ஆவேசமாக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளன.
தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அடுத்த வாரம் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரான்ஸ் முழுவதும் தொழிலாளர்களும் இளைஞர்களும் "அனைத்தையும் முடக்கும்" போராட்டங்களுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை மற்றும் அதைத் தொடர்ந்து வந்த அரசு ஒடுக்குமுறை என்பன, பிரிட்டனின் வரலாற்றில் மிகவும் வலதுசாரி பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கீழுள்ள ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
தனியார்மயமாக்கலை துரதப்படுத்தும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் திட்டங்கள், ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் இலவசக் கல்வி முறைக்கு ஒரு கொடூரமான அடியாக இருக்கும்.
கடந்த சனிக்கிழமை காலை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிக்காகோ மீது போர் பிரகடனம் செய்துள்ளார்.
ஜனாதிபதி மக்ரோனை பதவி நீக்கம் செய்வதன் மூலம் மட்டுமே நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்ற அடிபணியா பிரான்ஸ் கட்சியின் தலைவர் மெலன்சோனின் அழைப்பு, தொழிலாள வர்க்கம் எடுக்க வேண்டிய அவசியமான புரட்சிகர, சோசலிச நடவடிக்கைகளுக்கு அவர் காட்டும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
தொழிலாளர் வர்க்கம் தனது ஊதியங்களையும் நிலைமைகளையும் பாதுகாக்க எந்த வகையிலும் அணிதிரள்வதற்கு எதிராக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, மனித உரிமைகள் சட்டத்தை இயற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திடம் அழைப்பு விடுக்கின்றது.
ஜே.இ.பி./தே.ம.ச. மற்றும் இ.தொ.கா. இடையேயான புதிய அரசியல் கூட்டணி, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் பயன்படுத்தப்படுவதை தோட்டத் தொழிலாளர்களும் இளைஞர்களும் காண்பர்.
வெனிசுவேலாவின் கடற்பகுதியில் ஒரு சிறிய படகின் மீது அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலை உலக சோசலிச வலைத்தளம் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் குறைவாக இருந்தாலும், இது ஒரு பாரிய படுகொலை மற்றும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பின் குற்றச் செயல் என்று தெளிவாகக் கூறலாம்.
2025 ஆகஸ்ட் 2 முதல் 9 வரை இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைக்காலப் பள்ளியை அறிமுகப்படுத்துவதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 20 தலைவர்களில் பலரின் வருகை குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதமரின் வருகை —ஏழு ஆண்டுகளில் அவர் சீனாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம்— வாஷிங்டனில் எச்சரிக்கை மணிகளைத் தூண்டியுள்ளது.
காஸா நகரத்தைக் கைப்பற்றி, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதுக்கு, நெதன்யாகு காஸாவில் "இறுதி நகர்வுகள்" என்று எதை அழைத்தாரோ அதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன: அதாவது, பாலஸ்தீனியர்களை கெட்டோ சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்து, பரம்பரையாக அவர்கள் வாழ்ந்த தாயகத்தில் இருந்து அவர்களை வெளியேற்றுவதாகும்.
பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ, தோல்வியடையும் தருவாயில் இருக்கும் அவரது சிக்கன வரவு-செலவு திட்டத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்ததன் மூலமாக, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் அரசியல் நெருக்கடியை வெடிக்கச் செய்துள்ளார்.
போரின் தர்க்கம் நேரடியாக ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஒரு இராணுவ மோதலுக்கு வழிவகுக்கிறது. இது, மில்லியன் கணக்கான மக்களின் உயிருக்கும் முழுக் கண்டத்தின் அழிவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களைத் தொடர்ந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, ஐரோப்பிய அரசாங்கங்கள் புதிய அச்சுறுத்தல்களை விடுக்கவும் போர் உந்துதலைத் துரிதப்படுத்துவதற்கும் இவற்றைப் பற்றிக் கொண்டுள்ளன.
அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர், போராட்டத்தின் மூலமாக வென்றெடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூக முன்னேற்றத்தையும் கிழித்தெறிந்து, நவீன அமெரிக்க வரலாற்றின் ஒட்டுமொத்த போக்கையும் தலைகீழாக மாற்ற தீர்மானகரமாக உள்ள ஒரு ஆளும் வர்க்கத்திற்காக ட்ரம்பின் வேலைத்திட்டம் பேசுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம், வளர்ந்து வரும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களால் தூண்டிவிடப்பட்ட, தீவிரமடைந்துவரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலைமையிலேயே, விக்ரமசிங்க கைது செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியின் தெற்கில் உள்ள நாசர் மருத்துவமனை மீது ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில், 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
"ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்" என்ற தனது சமீபத்திய சுற்றுப்பயணத்தில், ஜனநாயகக் கட்சியை சீர்திருத்துவதற்கான பிரமைகளை ஊக்கப்படுத்திவரும் பெர்னி சான்டர்ஸ், ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளையும், முக்கிய நகரங்களை இராணுவ ரீதியாக ஆக்கிரமிக்கும் அவரது அச்சுறுத்தல்களையும் முற்றிலுமாக புறக்கணித்துள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்கா, 2,200 கடற்படையினருடன் நீரிலும் நிலத்திலும் தாக்குதலை மேற்கொள்ளும் படையை நிலைநிறுத்தியிருப்பதானது, போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற வாஷிங்டனின் அற்பத்தனமான கூற்றுக்களை தகர்த்தெறிகிறது.
முழு தொழிலாள வர்க்கத்திற்கும் இன்றியமையாத ஒரு வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடும் இந்தக் கூட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள், ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிராமப்புற ஏழைகளையும் பங்கேற்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.
சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கையிலும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழில்துறை போராட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் தீவிரமயமாதலின் ஒரு பகுதியே இந்த வேலைநிறுத்தம் ஆகும்.
காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலையின் புதிய மற்றும் இன்னும் கொடிய கட்டத்தில், இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு வெளியே இருக்கும் காஸாவின் கடைசிப் பகுதியான காஸா நகரத்தின் மீது, இஸ்ரேலிய இராணுவம் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் உக்ரேனையும் ரஷ்யாவையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஐரோப்பிய சக்திகளின் இலக்கு, ஒரு பேரழிவுகரமான தவறான கணக்கீடு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போர் மற்றும் கனடாவை இணைப்பதற்கான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கனேடிய ஆளும் வர்க்கமும் தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஊக்குவிக்கும் "தேசிய ஒற்றுமை" என்ற பொய்யை விமானப் பணியாளர்களின் மீறல் தகர்த்தெறிந்துள்ளது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், அமெரிக்காவின் நலன்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்று கருதிய அதிதீவிர வலதுசாரிகளின் "அமெரிக்கா முதலில்" பாரம்பரியத்திற்கு புத்துயிரூட்டும் ட்ரம்ப், பசிபிக் போரையும் சீனாவுடனான மோதலையும் நோக்கிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அடுக்குகளுக்காகப் பேசுகிறார்.
தங்களது ஊதியங்கள், தொழில்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கப் போராட்டத்தில் நுழையும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினரும், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தோற்கடிக்காமல் தங்களது உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது வெல்லவோ முடியாது.
இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தின் இனவெறி நடவடிக்கைகளை அவர் அம்பலப்படுத்தியதால், அவர் பலமுறை அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டுள்ளதுடன் அவரது செய்தி வெளியீட்டிலும் தலையிடுகள் இருந்துள்ளன.
பெரும் செல்வந்தர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு பணம் செலுத்துவதற்கு நிர்வாகத்திற்கு வருவாயை வழங்குவதே, ட்ரம்பின் வரி விதிப்புகளின் மைய நோக்கமாகும்.
ஆனந்த தவுலகல, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) தலைவர்களில் ஒருவரும் நீண்டகால மத்திய குழு உறுப்பினருமாவார்.
29 விரிவுரைகளுடன் ஏழு நாட்கள் இடம்பெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடை காலப் பள்ளியானது, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்த விசாரணையை விரிவாக மதிப்பாய்வு செய்து, அதை ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுப் பாதையில் நிலைநிறுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் ஒரு இராணுவவாத சதிக்குழுவாக செயல்படுகிறது. இது, ஐரோப்பிய மக்களிடையே ரஷ்யாவுடனான போருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்து வருகின்ற போதிலும், மீண்டும் ஆயுதம் ஏந்தி அதன் இராணுவ வலிமையை நிலைநாட்ட தீவிரமாக உள்ளது.
இலங்கை இராணுவமும் பொலிசும், குறிப்பாக நான்கு தசாப்தங்களாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் குடியிருப்பாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவதில் பேர் போனவை.